வாழையின் ஒவ்வொரு பகுதியும் அற்புத மருத்துவ பலன் கொண்டுள்ளது. வாழை இலை, வாழை பூ, வாழை தண்டு, வாழைக்காய் என அனைத்து பகுதிகளும் மிகுந்த பயன் தருபவை. மேலும் சிறந்த பலன் தருபவை.
முன்னோர் வாழ்த்தும்போது கூட வாழையடி வாழையாய் என்றே வாழ்த்துவர். அதாவது வாழை வீழ்ந்தாலும் அதன் சிறு கன்றுகளை அருகில் விட்டு செல்லும். அது போல சந்ததி பெருகி வாழ வேண்டும் என்பதற்காக இவ்வாறு வாழையடி வாழையாய் என்று வாழ்த்துவர்.
வாழை இருக்கும் போதும் பயன்படும். அதாவது வாழை இருக்கும் போது இலை, பூ, காய் அதன்பின் பழம் என்று நமக்கு பலன் தரும். அது தார் விட்டபின் வெட்டிய பிறகும் அதன் தண்டு நமக்கு பயன் தரும்.
இன்று வாழை பூவை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் பருப்பு உசிலி செய்யும் விதத்தை இந்த பதிவில் பகிர்வதை எண்ணி மகிழ்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக